search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலி
    X
    பலி

    கும்பகோணத்தில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

    கும்பகோணத்தில் நண்பருடன் கொள்ளிடம் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த அணைக்கரை வடபாதி குறிச்சி தட்சன் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் மகன் ஆனந்த்(வயது19). இவர் செம்பனார்கோயிலிலுள்ள ஒரு கல்லூரியில் பி.லிட் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டின் பின்புறம் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நண்பருடன் குளித்து கொண்டிருந்தார். 

    அப்போது கொள்ளிடம் ஆற்றில், பாலம் போடுவதற்காக அடைக்கப்பட்ட பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது அதிலுள்ள சேற்றில் ஆனந்த் மூழ்கினார். இதனை அறிந்த அவரது நண்பர்கள்,கூச்சலிடவே கரையில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஆனந்த் சகதிக்குள் சிக்கி இறந்தது தெரியவந்தது. 

    இதுபற்றி  திருப்பனந்தாள் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×