search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    டாஸ்மாக் திறப்பதை மறுபரீசிலனை செய்ய வேண்டும்- விஜயகாந்த்

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் மே 7-ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மே 7 ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    ஊரடங்கால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், டாஸ்மாக்கை திறப்பது பிரச்சனையை ஏற்படுத்தும். டாஸ்மாக் கடைகளை திறக்காததால் மக்களும் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×