search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிவாள் வெட்டு
    X
    அரிவாள் வெட்டு

    கல்லணையில் மீன் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு

    திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கல்லணையில் மீன் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கல்லணை பாலத்தில் மீன் வாங்குவது தொடர்பாக கல்லணை மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் சதீஷ், பாலமுருகன், சரவணன் ஆகியோருக்கும், அருகில் உள்ள கிளிக்கூடு கிராமத்தை சேர்ந்த அஜய், கிருஷ்ணபிரகாஷ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் கிளிக்கூடு அஜய், கிருஷ்ணபிரகாஷ் இவர்களுடன் மற்றும் 4 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில் கல்லணையை சேர்ந்த சதீஷ் (32), பாலமுருகன்(30) சரவணன்(28) ஆகியோர் காயமடைந்தனர்.

    காயமடைந்த மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தோகூர் போலீசில் சரவணன்(32) கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குபதிவு செய்து கிளிக்கூடு கிராமத்தை சேர்ந்த அஜய் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்.

    Next Story
    ×