search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    சென்னையில் 233 தெருக்களுக்கு சீல்

    சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2323 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 906 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது:

    சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்

    மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. அதில்

    ராயபுரம் - 56
    திரு.வி.க. நகர் - 49
    தேனாம்பேட்டை - 28
    தண்டையார்பேட்டை - 25

    தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
    Next Story
    ×