search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக நிர்வாகிகள் மளிகை பொருட்களை வழங்கிய காட்சி.
    X
    திமுக நிர்வாகிகள் மளிகை பொருட்களை வழங்கிய காட்சி.

    கொரோனா அவசர கால உதவி பொருட்கள்: திமுக நிர்வாகிகள் வழங்கினர்

    அரக்கோணம் அருகே கொரோனா அவசர கால பாதிப்பை முன்னிட்டு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகளை திமுக நிர்வாகிகள் வழங்கினர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாராஞ்சி ஏ.சவுந்தர் தலைமையில் கொரோனா அவசர கால பாதிப்பை முன்னிட்டு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் சக்கரவர்த்தி, ஊராட்சி செயலாளர்கள் எம்.மூர்த்தி, குப்புசாமி, மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செம்பேடு, பெருமாள்ராஜபேட்டை, மிட்டப்பேட்டை பகுதியில் உள்ள நலிந்தாங்கள், சுகாதார பணியாளர் ஆகியோருக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது. முடிவில் தமிழ்மணி நன்றி கூறினார்.
    Next Story
    ×