என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டையில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி விழா
Byமாலை மலர்30 April 2020 2:07 PM GMT (Updated: 30 April 2020 2:07 PM GMT)
ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ ராமானுஜரின் 1004ம் ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ ராமானுஜரின் 1004ம் ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது.
ஸ்ரீ ராமானுஜரின் 1004ம் ஆண்டு ஜெயந்தி விழா முன்னிட்டு அறக்கட்டளை வளாகத்தில் திருப்பல்லாண்டு திருப்பள்ளி எழுச்சி திருப்பாவை ஸ்ரீ ஆண்டாள் வாழித்திருநாமம் வாரணம் ஆயிரம் சேவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
உலக அமைதிக்காகவும் நாட்டுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழவும் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்ற சிகிச்சை அளித்துவரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் போலீசார், தூய்மைப்பணியாளர்கள் சுகாதாரத்துறையினர் ஆகியோர்களும் அவர்களின் குடும்பத்தாரும் ஆரோக்கியத்துடன் வாழ பாராயணமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை பொருளாளர் மோகன் சக்திவேல், ஸ்ரீ உடையவர் சாரிடபிள் டிரஸ்ட் செயலாளர் இளஞ்செழியன், ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை வாழ்நாள் உறுப்பினர் பேபி வெங்கடேசன், பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X