என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் ஆய்வு
Byமாலை மலர்30 April 2020 11:07 AM GMT (Updated: 30 April 2020 11:07 AM GMT)
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் இதுவரை 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை யடுத்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப் பாளையம், சிறுமுகை, மதுக்கரை, குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, உக்கடம் உள்பட 18 பகுதிகள் நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடு மண்டல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு சுரங்கத்துறை இயக்குனர் சரவண வேல்ராஜ், சிட்கோ நிர்வாக இயக்குனர் கஜலட்சுமி ஆகிய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலா குழுவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
இந்த அதிகாரிகள் தலைமையிலான குழு பார்வையிடுவதற்காக இன்று கோவைக்கு வர உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியதாவது: கோவை மாவட்டம் உள்பட முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 5 மாநகராட்சிகளில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடு மண்டல பகுதிகளை ஆய்வு செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் இன்று கோவைக்கு வருகை தர உள்ளனர்.மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக எந்த ஒரு பாதிப்பும் புதிதாக உருவாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல திருப்பூர் மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனர் நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்து அங்கு கொரோனா தொற்று கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்ய உள்ளார்.
கோவை மாவட்டத்தில் இதுவரை 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை யடுத்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப் பாளையம், சிறுமுகை, மதுக்கரை, குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, உக்கடம் உள்பட 18 பகுதிகள் நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடு மண்டல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு சுரங்கத்துறை இயக்குனர் சரவண வேல்ராஜ், சிட்கோ நிர்வாக இயக்குனர் கஜலட்சுமி ஆகிய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலா குழுவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
இந்த அதிகாரிகள் தலைமையிலான குழு பார்வையிடுவதற்காக இன்று கோவைக்கு வர உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியதாவது: கோவை மாவட்டம் உள்பட முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 5 மாநகராட்சிகளில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடு மண்டல பகுதிகளை ஆய்வு செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் இன்று கோவைக்கு வருகை தர உள்ளனர்.மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக எந்த ஒரு பாதிப்பும் புதிதாக உருவாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல திருப்பூர் மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனர் நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்து அங்கு கொரோனா தொற்று கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்ய உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X