என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் பகுதியில் இன்று பலத்த மழை
Byமாலை மலர்29 April 2020 2:22 PM GMT (Updated: 29 April 2020 2:22 PM GMT)
விழுப்புரம் பகுதியில் இன்று இடியுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடைவெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் வீட்டுக்குள் ளேயே முடங்கிய வண்ணம் உள்ளனர். எனவே எப்போது மழை பெய்யும் என்று எதிர் பார்த்திருந்த வேளையில் இன்று அதிகாலையில் கருமேகங்கள் சூழ்ந்தன. காலை 6.30 மணிக்கு பலத்த மழை இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் நகர் பகுதியான கோலியனூர், வளவனூர், பெரும்பாக்கம், அரசூர், சாலைஅகரம், அய்யூர் அகரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலைய தாழ்வான பகுதியில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இந்த மழையால் ஓரளவு வெப்பம் தணிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X