search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டம்
    X
    திண்டுக்கல் மாவட்டம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 4 பேர் குணமடைந்தனர்

    திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 4 பேர் குணமடைந்ததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உள்ளதாக 80 நபர்களுக்கு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 80 நபர்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவர்களில் 95 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிகிச்சை பெற்று வந்தவர்களில் எற்கனவே 63 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதைத் தொடர்ந்து மேலும் 4 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 12 பேர் மட்டும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×