search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    3 மாநகராட்சிகளுக்கு புதிய அறிவிப்பு

    சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் காலை முதல் மாலை வரை கடைகள் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை, கோவை, மதுரையில் ஆகிய 3 மாநகராட்சி பகுதியில் இன்று இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை மறுநாள் முதல் 26.04.2020-க்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும் என அரசு தெரிவித்துள்ளது.

    மேலும் நாளை மட்டும் பொதுமக்கள் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

    1.5.2020 முதல் மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

    பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக, பொறுமை, காத்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து, முக கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

    இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×