என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
Byமாலை மலர்28 April 2020 10:31 AM GMT (Updated: 28 April 2020 10:31 AM GMT)
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வேடிப்பிள்ளை. இவர்களுக்கு 2 வயதில் தில்ஷன் என்ற மகன் இருந்தான். நேற்று காலை தில்ஷன், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன் மகன் ரித்தினுடன்(6), அப்பகுதியில் உள்ள குட்டையின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறுவர்கள் 2 பேரும் குட்டைக்குள் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று குட்டைக்குள் இறங்கி, தண்ணீரில் மூழ்கிய 2 சிறுவர்களையும் மீட்டு புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தில்ஷனும், ரித்தினும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வேடிப்பிள்ளை. இவர்களுக்கு 2 வயதில் தில்ஷன் என்ற மகன் இருந்தான். நேற்று காலை தில்ஷன், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன் மகன் ரித்தினுடன்(6), அப்பகுதியில் உள்ள குட்டையின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறுவர்கள் 2 பேரும் குட்டைக்குள் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று குட்டைக்குள் இறங்கி, தண்ணீரில் மூழ்கிய 2 சிறுவர்களையும் மீட்டு புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தில்ஷனும், ரித்தினும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X