என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கண்டனம்
Byமாலை மலர்28 April 2020 9:54 AM GMT (Updated: 28 April 2020 9:54 AM GMT)
மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை நிறுத்தியதற்கு ஜாக்டோ-ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை:
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய-மாநில அரசுகள் அதிக நிதியை செலவழித்து வருகின்றன. இதனால் ஒருசில செலவுகளை குறைத்து மத்திய-மாநில அரசுகள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அகவிலைப்படி நிலுவை தொகை வழங்குவதும் அடுத்த ஆண்டு ஜூன் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கு ரூ. 4,950 கோடி சேமிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதற்கு ஜாக்டோ-ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பாதிப்பு உள்ள இக்கட்டான சூழலில் போராடி பெற்ற உரிமையான சரண் விடுப்பை ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுபோதாது என்று வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியை 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைத்துள்ளது. மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசும் அகவிலைப்படியை நிறுத்தியதை கண்டிக்கிறோம்.
இதற்கான அரசாணைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய-மாநில அரசுகள் அதிக நிதியை செலவழித்து வருகின்றன. இதனால் ஒருசில செலவுகளை குறைத்து மத்திய-மாநில அரசுகள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அகவிலைப்படி நிலுவை தொகை வழங்குவதும் அடுத்த ஆண்டு ஜூன் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கு ரூ. 4,950 கோடி சேமிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதற்கு ஜாக்டோ-ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பாதிப்பு உள்ள இக்கட்டான சூழலில் போராடி பெற்ற உரிமையான சரண் விடுப்பை ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுபோதாது என்று வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியை 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைத்துள்ளது. மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசும் அகவிலைப்படியை நிறுத்தியதை கண்டிக்கிறோம்.
இதற்கான அரசாணைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X