என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்
திருவெறும்பூர்:
திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாற்று திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மருத்துவ துறைக்கு சவாலாக இருக்கும் கொரோனா வைரஸ் தொற் றுதல் பரவுதலை தடுக்க ஊர டங்கு அமுலுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும்பாலனோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
இந்நிலையில் அரசு சார்பிலும், தன்னார்வல அமைப்புகள் சார்பிலும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சியினரும் தங்களது பங்களிப்பாக களம் இறங்கி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவெ றும்பூர் அருகில் உள்ள சோழ மாதேவிபுரத்தில் உள்ள மாற்றுதிறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதனை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ரத்தினவேல் அறிவுறுத்தலின்படி, நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை வருவாய்த்துறையினர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர் எஸ். எஸ்.ராவணன் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். இதனை மாற்று திறனாளிகள் சமூக விலகலை கடைபிடித்து பெற்றுகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்