என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி டிப்ளமோ மாணவர் பலி
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கே. எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் சதாசிவம். டிப்ளமோ படித்து வந்த இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் எலி வேட்டைக்கு சென்றார்.
அப்போது அந்தேரிப்பட்டியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் கால் சிக்கி சதாசிவம் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சதாசிவம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்த சதாசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்த கே.எட்டிப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் (52), சபரி (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்