search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    தென்காசி அருகே கொரோனா வார்டில் இருந்து தப்பிய பிளஸ்-2 மாணவர் திடீர் மரணம்

    மூச்சுதிணறலுக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தப்பிய பிளஸ்-2 மாணவர் திடீரென மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஐந்தாம் கட்டளையை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் கபிலன் (வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இவர் அடிக்கடி அப்பகுதியில் உள்ள ஆறு, குளம், கிணறு பகுதிகளில் நண்பர்களுடன் சென்று குளித்து வந்துள்ளார். 

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு இவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அவர் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூச்சுதிணறல் இருந்ததால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். 

    கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்ததால் மனமுடைந்த கபிலன் மற்றும் அவரது பெற்றோர் மாணவனை வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவெடுத்தனர். இதையடுத்து மருத்து வர்களின் அனுமதியின்றி கபிலனை அவரது பெற்றோர்  மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்று விட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் கபிலன் மாயமானது குறித்து மருத்துவமனைக்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கபிலன் எங்கு சென்றான் என விசாரித்து வந்தனர். அதன்படி சொந்த ஊரான ஐந்தாம் கட்டளைக்கு சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் ஆய்க்குடி அருகே தேசிய நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மாணவனும் அவரது பெற்றோரும் சென்றனர். அங்கு வைத்து கபிலன் மருந்து- மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்தநிலையில் மாணவன் கபிலன் திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆய்க்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மூச்சுதிணறலுக்காக சேர்க்கப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததா? அல்லது நெஞ்சுவலி இருந்ததால் அதன் காரணமாக அவர் இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எனினும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவருக்கு கொரோனா தொற்று இருந்ததா என தெரியவரும். கொரேனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு தப்பிச்சென்ற மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×