என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காங்கயம் அருகே விவசாயி உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ராமபட்டிணத்தை சேர்ந்தவர் ராமசாமி(வயது72). விவசாயி. இவருக்கு வள்ளியாத்தாள் என்ற மனைவியும், வேலுச்சாமி(48), குருசாமி(45) என 2 மகன்களும் உள்ளனர். ராமசாமிக்கு அந்த பகுதியில் 10 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ராமசாமி தனது நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க அனுமதி அளித்தார்.
அதற்காக அவருக்கு நிவாரணத் தொகையாக ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 497 வழங்கப்பட்டது. இந்த தொகையையும், 10 ஏக்கர் நிலத்தை பாதி, பாதியாக பிரித்து தருமாறு ராமசாமியின் மகன்கள் தந்தையிடம் கேட்டு வந்துள்ளனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் தந்தை, மகன்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நிலத்தை பிரித்து கொடுக்காமலும், பணத்தை தராமலும் இழுத்தடித்து வந்த தந்தைக்கு மகன்கள் 2 பேரும் கடந்த 6 மாதமாக உணவு வழங்க வில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ராமசாமி நேற்று தனது நிலத்திற்கு சென்றார்.
வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட அவர் தனது நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுரத்தில் கயிற்றை மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்