என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கமுதி அருகே மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
கமுதி:
கமுதி அருகேயுள்ள நாராயணபுரத்தை சேர்ந்த மூதாட்டி அழகம்மாள் (75). இவர் அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டையில் உள்ள பேரன் வீட்டில் இருந்தபோது, நேற்று முன்தினம் மாலை வயது முதிர்வு காரணமாக இறந்தார்.
மூதாட்டியின் உடலை ஆம்புலன்ஸ் வேனில்ஏற்றி பெருநாழி அருகே திம்ம நாதபுரத்தை சேர்ந்த உறவினர்கள் 11 பேருடன், கமுதி அருகே நாராயணபுரத்தில் அடக்கம் செய்ய கமுதிக்கு வந்தனர்.
இறந்த மூதாட்டி, மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உறவினர்கள் உட்பட 13 பேருக்கும், பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என, சுகாதாரதுறையினர் உத்திரவாதம் அளித்தால்தான், நாராயணபுரத்தில் அடக்கம் செய்ய முடியும் என, கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதனால் மூதாட்டியின் உடல் கமுதி அரசு மருத்து வமனையில் வைக்கப்பட்டு, போலீஸ், வருவாய்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மூதாட்டியின் உறவினர்கள் 11 பேருக்கு பெரு நாழி ஆரம்ப சுகா தார நிலையத்தில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, திம்ம நாதபுரத்தில் அவர்களின் வீடுகளில் தனிமைபடுத்தபட்டனர். இதனால் உறவினர்கள் இறுதிசடங்கில் கலந்து கொள்ளாமல், குறைந்த எண்ணிக்கையிலான கிராமத்திலுள்ள நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்