என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிர் செய்த இடத்திலேயே அழுகும் பனங்கிழங்குகள்
Byமாலை மலர்23 April 2020 2:20 PM GMT (Updated: 23 April 2020 2:20 PM GMT)
திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைந்த பனங்கிழங்குகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால், அவை பயிர் செய்த இடத்திலேயே முற்றி அழுகும் நிலையில் உள்ளது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனங்கிழங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் பனங்கிழங்குகள், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. வெளியூர்களில் வசிக்கும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்து விட்டு திரும்பும்போது பனங்கிழங்குகளை விரும்பி வாங்கி செல்வார்கள். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெளியூர்களுக்கு பனங்கிழங்குகளை அனுப்பி வைக்க முடியவில்லை. இதனால் அவை திசையன்விளை மார்க்கெட்டுக்கு மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
இங்கே வழக்கத்தைவிட குறைவான மக்களே அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவதால், பனங்கிழங்கு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விளைந்த பனங்கிழங்குகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால், அவை பயிர் செய்த இடத்திலேயே முற்றி அழுகும் நிலை உள்ளது.
இதனால் பனங்கிழங்கு விலை மிகவும் குறைவாக உள்ளது. தடை உத்தரவுக்கு முன்பு 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கட்டு ரூ.50 முதல் ரூ.60 வரையே விற்கப்பட்டது. இதனால் பனங்கிழங்கு பிடுங்கி எடுக்க ஆகும் செலவுகூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விலை குறைந்தாலும் விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகளும் கூறினர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனங்கிழங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் பனங்கிழங்குகள், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. வெளியூர்களில் வசிக்கும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்து விட்டு திரும்பும்போது பனங்கிழங்குகளை விரும்பி வாங்கி செல்வார்கள். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெளியூர்களுக்கு பனங்கிழங்குகளை அனுப்பி வைக்க முடியவில்லை. இதனால் அவை திசையன்விளை மார்க்கெட்டுக்கு மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
இங்கே வழக்கத்தைவிட குறைவான மக்களே அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவதால், பனங்கிழங்கு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விளைந்த பனங்கிழங்குகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால், அவை பயிர் செய்த இடத்திலேயே முற்றி அழுகும் நிலை உள்ளது.
இதனால் பனங்கிழங்கு விலை மிகவும் குறைவாக உள்ளது. தடை உத்தரவுக்கு முன்பு 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கட்டு ரூ.50 முதல் ரூ.60 வரையே விற்கப்பட்டது. இதனால் பனங்கிழங்கு பிடுங்கி எடுக்க ஆகும் செலவுகூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விலை குறைந்தாலும் விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகளும் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X