என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மளிகை பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை பாயும்- எம்எல்ஏ எச்சரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி:
கொரோனா வைரஸ் தாக்குதலால் வேளை இன்றி ஊரடங்கில் பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பொ.மல்லாபுரம் பேரூராட்சி பொம்மிடியில் நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கலந்து கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் பகுதிகளில் மளிகை பொருட்கள் கூடுதல் விலை யில் விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வருகின்றது.
அதுபோல் யாராவது கூடுதல் விலைக்கு விற்பதாக தெரியவந்தால் அந்த கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கூடுதல் விலை விவரம் தெரியவந்தால் கடுமையான சட்டம் பாயும் என எச்சரித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்