என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் 24 பேர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதி
Byமாலை மலர்23 April 2020 10:22 AM GMT (Updated: 23 April 2020 10:22 AM GMT)
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 24 பேர் கொரோனா அறிகுறிகளுடன் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கோவை:
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 14 நாட்களுக்கு பின் அவர்களுக்கு இரு முறை ரத்தம், சளி மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்படுகிறது. 2 பரிசோதனையிலும் கொரோனா இல்லை என முடிவு வந்தால் மட்டுமே அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நிலையில் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவையை சேர்ந்த 5 பேர், திருப்பூர், நீலகிரியை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் இதுவரை 88 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டனர். தற்போது கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கோவையை சேர்ந்த 46 பேர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 24 பேர் கொரோனா அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 14 ஆண்கள், 10 பெண்கள் ஆவர். இவர்களில் 7 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 17 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 14 நாட்களுக்கு பின் அவர்களுக்கு இரு முறை ரத்தம், சளி மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்படுகிறது. 2 பரிசோதனையிலும் கொரோனா இல்லை என முடிவு வந்தால் மட்டுமே அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நிலையில் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவையை சேர்ந்த 5 பேர், திருப்பூர், நீலகிரியை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் இதுவரை 88 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டனர். தற்போது கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கோவையை சேர்ந்த 46 பேர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 24 பேர் கொரோனா அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 14 ஆண்கள், 10 பெண்கள் ஆவர். இவர்களில் 7 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 17 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X