என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி சாகுபடி தீவிரம்
Byமாலை மலர்23 April 2020 7:48 AM GMT (Updated: 23 April 2020 7:48 AM GMT)
திருப்பூரில் தக்காளி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் புதிதாக காய்கறிகளையும் ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பராமரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தளி, மடத்துக்குளம் பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, நெல், கரும்பு, சப்போட்டா, கொய்யா, மா உள்ளிட்ட நீண்டகால பயிர்களையும் கத்தரி, வெண்டை, அவரை, பீட்ரூட், தக்காளி, வெங்காயம், மிளகாய், பூசணி, அரசாணி உள்ளிட்ட காய்கறிகளையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஊரடங்கு அமலில் இருந்தாலும் விவசாயத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் சாகுபடி பணிகள் பரவலாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் புதிதாக காய்கறிகளையும் ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பராமரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தளி அமராவதி சுற்றுவட்டார பகுதியில் தக்காளி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்:-
தக்காளி குறுகியகால பயிர், முறையான பராமரிப்பு இருந்தால் நடவு செய்த 60 நாட்களில் காய்ப்புக்கு வந்து விடும். ஒரு மாதம் முழுவிளைச்சலை அளிக்கும். நாற்றுப்பண்ணையில் இருந்து தக்காளி நாற்று ஒன்று 50 காசு வீதம் ஏக்கருக்கு 10 ஆயிரம் நாற்றுகளை விலைக்கு வாங்கி வந்து நடவு செய்கிறோம்.
தற்போது உள்ள கோடை வெயிலின் தாக்கத்தால் நடவு செய்யப்பட்ட தக்காளி நாற்றுகள் காய்ந்து விடுவதால் மீண்டும் மறுநடவு செய்யவேண்டி உள்ளது. சொட்டுநீர் பாசனம் கைகொடுத்து உதவுவதால் சாகுபடி பணிகளில் தொடர்ந்து ஈடுபட முடிகிறது. ஊரடங்கின் காரணமாக தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஊரடங்கிற்கு பின்பு தக்காளி விலையேற்றத்தை சந்திக்கும் என்ற நம்பிக்கையில் நடவு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தளி, மடத்துக்குளம் பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, நெல், கரும்பு, சப்போட்டா, கொய்யா, மா உள்ளிட்ட நீண்டகால பயிர்களையும் கத்தரி, வெண்டை, அவரை, பீட்ரூட், தக்காளி, வெங்காயம், மிளகாய், பூசணி, அரசாணி உள்ளிட்ட காய்கறிகளையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஊரடங்கு அமலில் இருந்தாலும் விவசாயத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் சாகுபடி பணிகள் பரவலாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் புதிதாக காய்கறிகளையும் ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பராமரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தளி அமராவதி சுற்றுவட்டார பகுதியில் தக்காளி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்:-
தக்காளி குறுகியகால பயிர், முறையான பராமரிப்பு இருந்தால் நடவு செய்த 60 நாட்களில் காய்ப்புக்கு வந்து விடும். ஒரு மாதம் முழுவிளைச்சலை அளிக்கும். நாற்றுப்பண்ணையில் இருந்து தக்காளி நாற்று ஒன்று 50 காசு வீதம் ஏக்கருக்கு 10 ஆயிரம் நாற்றுகளை விலைக்கு வாங்கி வந்து நடவு செய்கிறோம்.
தற்போது உள்ள கோடை வெயிலின் தாக்கத்தால் நடவு செய்யப்பட்ட தக்காளி நாற்றுகள் காய்ந்து விடுவதால் மீண்டும் மறுநடவு செய்யவேண்டி உள்ளது. சொட்டுநீர் பாசனம் கைகொடுத்து உதவுவதால் சாகுபடி பணிகளில் தொடர்ந்து ஈடுபட முடிகிறது. ஊரடங்கின் காரணமாக தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஊரடங்கிற்கு பின்பு தக்காளி விலையேற்றத்தை சந்திக்கும் என்ற நம்பிக்கையில் நடவு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X