என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்மா உணவகங்களில், முட்டையுடன் கூடிய விலையில்லா உணவு- அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு
Byமாலை மலர்23 April 2020 5:32 AM GMT (Updated: 23 April 2020 5:32 AM GMT)
தஞ்சை வடக்கு மாவட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் முட்டையுடன் கூடிய விலையில்லா உணவு வழங்கப்படும் என அமைச்சர் துரைக்கண்ணு அறிவித்துள்ளார்.
கபிஸ்தலம்:
அமைச்சரும், தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான துரைக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மே மாதத்துக்கு உண்டான அனைத்து ரேஷன் பொருட்களும் விலையில்லாமல் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு அதற்கான டோக்கன்களை வீடுதோறும் வழங்குவதற்கான தேதியையும் அறிவித்து உள்ளார்.
தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வார காலமாக விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று(வியாழக்கிழமை) முதல் அம்மா உணவகங்களில் முட்டையுடன் கூடிய விலையில்லா உணவு வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள வருகிற 3-ந் தேதி வரை தொடர்ந்து பொதுமக்களுக்கு விலையில்லாமல் காலை, மாலை, இரவு என 3 வேளைகளும் முட்டையுடன் கூடிய உணவு வழங்கப்படும். இதை ஏழை, எளிய தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சரும், தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான துரைக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மே மாதத்துக்கு உண்டான அனைத்து ரேஷன் பொருட்களும் விலையில்லாமல் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு அதற்கான டோக்கன்களை வீடுதோறும் வழங்குவதற்கான தேதியையும் அறிவித்து உள்ளார்.
தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வார காலமாக விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று(வியாழக்கிழமை) முதல் அம்மா உணவகங்களில் முட்டையுடன் கூடிய விலையில்லா உணவு வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள வருகிற 3-ந் தேதி வரை தொடர்ந்து பொதுமக்களுக்கு விலையில்லாமல் காலை, மாலை, இரவு என 3 வேளைகளும் முட்டையுடன் கூடிய உணவு வழங்கப்படும். இதை ஏழை, எளிய தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X