search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ஆழ்வார்திருநகரில் மளிகை கடையில் ரூ.85 ஆயிரம் கொள்ளை

    சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள மளிகை கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து ரூ.85 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    போரூர்:

    ஆழ்வார்திருநகர், பாலாஜி நகர் மெயின் ரோட்டில் மளிகை மொத்த விற்பனை கடை நடத்தி வருபவர் விஜயகுமார். இன்று காலை அவர் வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது ‌ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    பணப்பெட்டியில் இருந்த ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட் பண்டல்கள், சாக்லேட் உள்ளிட் பொருட்களை கொள்ளையர்கள் அள்ளி சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×