என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழத்தார்கள் விற்பனை பாதிப்பு- வாழை தோட்டத்தை தீ வைத்து எரித்த விவசாயி
Byமாலை மலர்21 April 2020 7:09 AM GMT (Updated: 21 April 2020 7:09 AM GMT)
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பழத்தார்கள் விற்பனை மந்தமானதையடுத்து, ஆள் கூலி கொடுத்து பழத்தார்களை எடுத்தால் நஷ்டம் ஏற்படும் என தனது 2 ஏக்கர் வாழை தோட்டத்தை தீ வைத்து விவசாயி எரித்துள்ளார்.
பல்லடம்:
பல்லடம் சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30) விவசாயி. இவரது தோட்டத்தில் 2 ஏக்கரில் சுமார் 2 ஆயிரம் குந்தால், நேந்திரன் ரக வாழை மரங்கள் வளர்த்து வந்தார். அந்த வாழைகளில் பழத்தார்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. அறுவடை செய்த பழத்தார்களை கேரளாவிற்கு அனுப்புவது வழக்கம், ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பழத்தார்களை கேரளாவுக்கு அனுப்புவதில் தடை ஏற்பட்டது.
இதனால் ரூ.600-க்கு விற்பனையாகும் பழத்தார்களை உள்ளூர் வியாபாரிகளிடம் ரூ.150-க்கு விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 9-ந்தேதி வீசிய பலத்த மழைக்காற்றால் சுமார் 900 வாழை மரங்கள் சரிந்து விட்டது. வாழை மரங்கள் அனைத்தும் சேதமானது, இதனால் உள்ளூர் வியாபாரிகளிடம் விற்பனை மேலும் மந்தமானது. இதனையடுத்து ஆள் கூலி கொடுத்து பழத்தார்களை எடுத்தால் நஷ்டம் ஏற்படும் என நினைத்த கோவிந்தராஜ் வேறு வழியில்லாமல் காற்றுக்கு முறிந்த வாழை மரங்களை தீ வைத்து எரித்தார். இதே போல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்லடம் சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30) விவசாயி. இவரது தோட்டத்தில் 2 ஏக்கரில் சுமார் 2 ஆயிரம் குந்தால், நேந்திரன் ரக வாழை மரங்கள் வளர்த்து வந்தார். அந்த வாழைகளில் பழத்தார்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. அறுவடை செய்த பழத்தார்களை கேரளாவிற்கு அனுப்புவது வழக்கம், ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பழத்தார்களை கேரளாவுக்கு அனுப்புவதில் தடை ஏற்பட்டது.
இதனால் ரூ.600-க்கு விற்பனையாகும் பழத்தார்களை உள்ளூர் வியாபாரிகளிடம் ரூ.150-க்கு விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 9-ந்தேதி வீசிய பலத்த மழைக்காற்றால் சுமார் 900 வாழை மரங்கள் சரிந்து விட்டது. வாழை மரங்கள் அனைத்தும் சேதமானது, இதனால் உள்ளூர் வியாபாரிகளிடம் விற்பனை மேலும் மந்தமானது. இதனையடுத்து ஆள் கூலி கொடுத்து பழத்தார்களை எடுத்தால் நஷ்டம் ஏற்படும் என நினைத்த கோவிந்தராஜ் வேறு வழியில்லாமல் காற்றுக்கு முறிந்த வாழை மரங்களை தீ வைத்து எரித்தார். இதே போல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X