search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 38 ஆக உயர்வு

    விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று டீ மாஸ்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது.

    இன்று திண்டிவனத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவரது கைக்குழந்தைக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×