search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    கொரோனாவால் இறந்தால் உடலை அடக்கம் செய்ய இடம் - விஜயகாந்த்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தால் உடலை அடக்கம் செய்ய இடம் தருவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தால் உடலை அடக்கம் செய்ய இடம் தருவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

    ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை இறந்தவர் உடலை அடக்கம் செய்ய தருவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

    மேலும் கொரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்வதால் பாதிப்பு ஏற்படாது என்பதை மக்களுக்கு அரசு புரிய வைக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 
    Next Story
    ×