search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி.
    X
    முதல்வர் பழனிசாமி.

    ரேபிட் டெஸ்ட் கிட் வழங்க பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

    தமிழகத்திற்கு கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கிட் வழங்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

    கடந்த ஐந்து நாட்களாக புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56-க்கு கீழ் இருந்தது. இந்நிலையில் இன்று 105 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 50 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இன்றைய 105 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இந்நிலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திரமோடியிடம் முதல்வர் பழனிசாமி, தமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் கிட்களை வழங்க கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். 
    Next Story
    ×