என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேபிட் டெஸ்ட் கிட் வழங்க பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை
Byமாலை மலர்19 April 2020 2:47 PM GMT (Updated: 19 April 2020 2:47 PM GMT)
தமிழகத்திற்கு கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கிட் வழங்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
கடந்த ஐந்து நாட்களாக புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56-க்கு கீழ் இருந்தது. இந்நிலையில் இன்று 105 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 50 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இன்றைய 105 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திரமோடியிடம் முதல்வர் பழனிசாமி, தமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் கிட்களை வழங்க கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X