என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேராவூரணி அருகே கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது
Byமாலை மலர்9 April 2020 11:09 AM GMT (Updated: 9 April 2020 11:09 AM GMT)
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே கஞ்சா கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடி கஞ்சா வியாபாரியை தேடி வருகின்றனர்.
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், கஞ்சாவை கடத்தி வருவதாகவும் பேராவூரணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் பேராவூரணி சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கஞ்சா வியாபாரியான அன்னக்கிளியிடம் கொடுக்க தம்பிக்கோட்டை கீழக்காட்டிலிருந்து கோகிலா (வயது30) 2.100கிராம் கஞ்சாவை ஊதா நிற பேக்கில் வைத்து அன்னக்கிளியிடம் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து போலீசார் உடனடியாக அப்பகுதிக்கு சென்று அன்னக்கிளி வீட்டை சோதனை செய்வதற்கு முன்பே அன்னக்கிளி வீட்டின் எதிரே உள்ள மங்கலம் (40) என்பவரிடம் கொடுத்து மறைத்து வைத்திருக்க அதையும் போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர். உடனடியாக போலீசார் இவர்கள் 3 பேரையும் பிடிக்க முயன்ற போது கஞ்சா வியாபாரியான அன்னக்கிளி போலீசாரின் பிடியில் சிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மற்ற 2 பெண்கள் போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய கஞ்சா வியாபாரி அன்னக்கிளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், கஞ்சாவை கடத்தி வருவதாகவும் பேராவூரணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் பேராவூரணி சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கஞ்சா வியாபாரியான அன்னக்கிளியிடம் கொடுக்க தம்பிக்கோட்டை கீழக்காட்டிலிருந்து கோகிலா (வயது30) 2.100கிராம் கஞ்சாவை ஊதா நிற பேக்கில் வைத்து அன்னக்கிளியிடம் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து போலீசார் உடனடியாக அப்பகுதிக்கு சென்று அன்னக்கிளி வீட்டை சோதனை செய்வதற்கு முன்பே அன்னக்கிளி வீட்டின் எதிரே உள்ள மங்கலம் (40) என்பவரிடம் கொடுத்து மறைத்து வைத்திருக்க அதையும் போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர். உடனடியாக போலீசார் இவர்கள் 3 பேரையும் பிடிக்க முயன்ற போது கஞ்சா வியாபாரியான அன்னக்கிளி போலீசாரின் பிடியில் சிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மற்ற 2 பெண்கள் போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய கஞ்சா வியாபாரி அன்னக்கிளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X