என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கடை அருகே ரோட்டில் சுற்றி திரிந்த முதியவரின் சாக்குப் பையில் ரூ.75 ஆயிரம்
Byமாலை மலர்8 April 2020 2:07 PM GMT (Updated: 8 April 2020 2:07 PM GMT)
புதுக்கடை அருகே ரோட்டில் பிச்சை எடுத்து வந்த முதியவரின் பையில் ரூ.74 ஆயிரத்து 630 பணம் இருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கடை:
புதுக்கடை அருகே முன்சிறையை அடுத்த ஒச்சவிளை பகுதியைச் சேர்ந்த முதியவர் சுப்பு. அந்த பகுதியில் பிச்சை எடுத்து வந்தார். இவர் ஒரு சாக்குமூடையை மட்டும் பத்திரப்படுத்தி கூடவே எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்தநிலையில் முதியவருக்கு உடலில் புண்கள் ஏற்பட்டு முன்சிறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து சிகிச்சை பெற்றார். அவருக்கு புண் பாதிப்பு அதிகம் இருந்ததால் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுமாறு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் வலியுறுத்தினர். ஆனால் முதியவர் சுகாதார நிலையத்திலேயே இருந்தார்.
இதனால் அந்த பகுதி இளைஞர்கள் உதவியுடன் முதியவரை ஆசாரிப்பள்ளம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது முதியவர் உடன் வைத்திருந்த சாக்குப்பையை வாங்கி சிலர் சோதித்தனர். அதில் சில்லறை பணமாக மொத்தம் ரூ.74 ஆயிரத்து 630 இருந்தது.
பணம் பாதுகாப்பாக இருக்க அதனை ஊராட்சி தலைவர் ஓமனாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் முதியவரை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிச்சை எடுத்து வந்த முதியவரின் பையில் ரூ.74 ஆயிரத்து 630 பணம் இருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கடை அருகே முன்சிறையை அடுத்த ஒச்சவிளை பகுதியைச் சேர்ந்த முதியவர் சுப்பு. அந்த பகுதியில் பிச்சை எடுத்து வந்தார். இவர் ஒரு சாக்குமூடையை மட்டும் பத்திரப்படுத்தி கூடவே எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்தநிலையில் முதியவருக்கு உடலில் புண்கள் ஏற்பட்டு முன்சிறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து சிகிச்சை பெற்றார். அவருக்கு புண் பாதிப்பு அதிகம் இருந்ததால் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுமாறு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் வலியுறுத்தினர். ஆனால் முதியவர் சுகாதார நிலையத்திலேயே இருந்தார்.
இதனால் அந்த பகுதி இளைஞர்கள் உதவியுடன் முதியவரை ஆசாரிப்பள்ளம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது முதியவர் உடன் வைத்திருந்த சாக்குப்பையை வாங்கி சிலர் சோதித்தனர். அதில் சில்லறை பணமாக மொத்தம் ரூ.74 ஆயிரத்து 630 இருந்தது.
பணம் பாதுகாப்பாக இருக்க அதனை ஊராட்சி தலைவர் ஓமனாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் முதியவரை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிச்சை எடுத்து வந்த முதியவரின் பையில் ரூ.74 ஆயிரத்து 630 பணம் இருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X