என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு அருகே தோட்டத்தில் குவியல் குவியலாக சிக்கிய குட்கா பொருட்கள் போலீசார் அதிரடி சோதனை
Byமாலை மலர்8 April 2020 10:57 AM GMT (Updated: 8 April 2020 10:57 AM GMT)
வத்தலக்குண்டு அருகே தோட்டத்தில் செடிகளுக்கு இடையே புதருக்குள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே ஆடுசாபட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள செடிகளுக்கு இடையே புதருக்குள் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவை எங்கிருந்து வந்தது? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் மளிகை கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில் தோட்டத்தில் குட்கா பொருட்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X