search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா பறிமுதல் - கோப்புப்படம்
    X
    குட்கா பறிமுதல் - கோப்புப்படம்

    வத்தலக்குண்டு அருகே தோட்டத்தில் குவியல் குவியலாக சிக்கிய குட்கா பொருட்கள் போலீசார் அதிரடி சோதனை

    வத்தலக்குண்டு அருகே தோட்டத்தில் செடிகளுக்கு இடையே புதருக்குள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே ஆடுசாபட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள செடிகளுக்கு இடையே புதருக்குள் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இவை எங்கிருந்து வந்தது? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் மளிகை கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில் தோட்டத்தில் குட்கா பொருட்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×