search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறுவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததை கண்டித்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    திருவையாறில் சிறுவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததை கண்டித்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த வெள்ளாம்பெரம்பூரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36). கூலித்தொழிலாளி

    இவரது மனைவி ஆனந்தி (31). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 12 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் ஆனந்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் (பிளஸ் 1 படித்து வருகிறார்) கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    இதை அறிந்த சிவகுமார் தனது மனைவியிடம் இந்த தொடர்பு உனக்கு தேவை இல்லை. அதனால் உடனடியாக இந்த தொடர்பை துண்டித்துவிடு என்று கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சிவகுமார் வெளியே சென்றிருந்த நேரத்தில் அந்த சிறுவனின் பெற்றோர் ஆனந்தியின் வீட்டிற்கு வந்து தங்கள் மகனுடன் உள்ள தொடர்பை உடனடியாக துண்டித்து விடுமாறு கூறியதுடன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சத்தம் போட்டு உள்ளனர்.

    அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த சிவகுமார் வீட்டிற்குள் வந்துள்ளார். அவர் வந்து தகராறு நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து மனைவியை சத்தம் போட்டுள்ளார். இந்த நிலையில் அன்று இரவு அனைவரும் தூங்கிவிட்டனர்.நேற்று அதிகாலையில் சிவக்குமார் எழுந்து பார்த்தபோது ஆனந்தியை காணவில்லை. மனைவியை வீட்டிற்குள் காணாததால் வெளியில் இருக்கலாம் என்று கருதி வீட்டு தோட்டத்திற்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது அங்கு இருந்த ஒரு மரத்தில் சேலையால் ஆனந்தி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே ஓடிச்சென்ற சிவகுமார் மனைவியின் உடலை இறக்கி பார்த்தபோது ஆனந்தி இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக சிவகுமார் நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நடுக்காவேரி போலீசார் சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×