search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அம்பத்தூரில் டாஸ்மாக் குடோனில் மதுபாட்டில்கள் கொள்ளை

    அம்பத்தூரில் டாஸ்மாக் குடோனில் மதுபாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் டாஸ்மாக் குடோன் உள்ளது. மது ஆலைகளில் இருந்து நேரடியாக வரும் மதுபானங்கள் இந்த குடோனில் வைக்கப்படுவது வழக்கம்.

    இங்கிருந்து வட சென்னை, தென் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் சப்ளை செய்யப்படுகிறது.

    ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் குடோனும் மூடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 25 -ந் தேதி செங்கல்பட்டில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களுடன் குடோன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்தது.

    கடந்த 10 நாட்களுக்கு மேல் குடோன் விடுமுறை என்பதால் அங்கு காவலாளி மட்டும் இருந்தார். இன்று காலை குடோனில் இருந்த சரக்கு லாரியின் மேற்பகுதி திறந்து இருப்பதை கண்ட காவலாளிகள் இதுபற்றி குடோன் மண்டல மேலாளருக்கு தகவல் அளித்தார்.

    அதிகாரிகள் வந்து பார்த்த போது லாரியில் இருந்த 10 அட்டைபெட்டியுடன் மது பாட்டில்களை மர்ம கும்பல் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

    இது குறித்து டாஸ்மாக் குடோன் மேலாளர் ராஜ கோபால் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×