என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பத்தூரில் டாஸ்மாக் குடோனில் மதுபாட்டில்கள் கொள்ளை
Byமாலை மலர்8 April 2020 7:42 AM GMT (Updated: 8 April 2020 7:42 AM GMT)
அம்பத்தூரில் டாஸ்மாக் குடோனில் மதுபாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் டாஸ்மாக் குடோன் உள்ளது. மது ஆலைகளில் இருந்து நேரடியாக வரும் மதுபானங்கள் இந்த குடோனில் வைக்கப்படுவது வழக்கம்.
இங்கிருந்து வட சென்னை, தென் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் சப்ளை செய்யப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் குடோனும் மூடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 25 -ந் தேதி செங்கல்பட்டில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களுடன் குடோன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்தது.
கடந்த 10 நாட்களுக்கு மேல் குடோன் விடுமுறை என்பதால் அங்கு காவலாளி மட்டும் இருந்தார். இன்று காலை குடோனில் இருந்த சரக்கு லாரியின் மேற்பகுதி திறந்து இருப்பதை கண்ட காவலாளிகள் இதுபற்றி குடோன் மண்டல மேலாளருக்கு தகவல் அளித்தார்.
அதிகாரிகள் வந்து பார்த்த போது லாரியில் இருந்த 10 அட்டைபெட்டியுடன் மது பாட்டில்களை மர்ம கும்பல் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து டாஸ்மாக் குடோன் மேலாளர் ராஜ கோபால் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் டாஸ்மாக் குடோன் உள்ளது. மது ஆலைகளில் இருந்து நேரடியாக வரும் மதுபானங்கள் இந்த குடோனில் வைக்கப்படுவது வழக்கம்.
இங்கிருந்து வட சென்னை, தென் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் சப்ளை செய்யப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் குடோனும் மூடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 25 -ந் தேதி செங்கல்பட்டில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களுடன் குடோன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்தது.
கடந்த 10 நாட்களுக்கு மேல் குடோன் விடுமுறை என்பதால் அங்கு காவலாளி மட்டும் இருந்தார். இன்று காலை குடோனில் இருந்த சரக்கு லாரியின் மேற்பகுதி திறந்து இருப்பதை கண்ட காவலாளிகள் இதுபற்றி குடோன் மண்டல மேலாளருக்கு தகவல் அளித்தார்.
அதிகாரிகள் வந்து பார்த்த போது லாரியில் இருந்த 10 அட்டைபெட்டியுடன் மது பாட்டில்களை மர்ம கும்பல் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து டாஸ்மாக் குடோன் மேலாளர் ராஜ கோபால் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X