search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இரவில் வியாபாரம் - 3 மளிகை கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

    ஊத்துக்கோட்டை அருகே இரவில் வியாபாரம் செய்த 3 மளிகை கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக் கோட்டை தாலுக்காவில் உள்ள மளிகை கடை உரிமையாளர்கள் சிலர் சமூக இடைவெளி கடைபிடிக்காமலும், விதிகளை மீறி இரவு வரை கடைகள் திறந்து விற்பணை செய்து வருவதாக ஊத்துக்கோட்டை தாசில்தார் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், வருவாய் அலுவலர் யுகந்தர் மற்றும் ஊழியர்களுடன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளமேனி கிராமத்தில் நேற்று இரவு திடீர்சோதனை நடத்தினார்.

    அப்போது இரவு நேரத்திலும் மளிகைகடைகளை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆசாராம், முத்துகிருஷ்ணன் ஆகியோரின் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதே போல் தாராட்சி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்என்பவரின் மளிகை கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.
    Next Story
    ×