என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் மகளை கர்ப்பமாக்கிவிட்டு நாடகமாடிய தந்தை கைது
Byமாலை மலர்8 April 2020 6:49 AM GMT (Updated: 8 April 2020 6:49 AM GMT)
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மகளை கர்ப்பமாக்கிவிட்டு நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான கொத்தனாருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். 15 வயதான 2-வது மகள் கொத்தனாருடன் வசித்து வருகிறார். இவர் கர்ப்பமாக இருப்பது கடந்த மாதம் (மார்ச்) தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கொத்தனார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 15 வயது சிறுமியின் கற்பத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பட்டீஸ்வரம் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது உடையாளூர் மண்ணடி தெருவைச் சேர்ந்த செந்தில் (வயது 28). என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி போலீசாரிடம் கூறினார்.
அதன்பேரில் பட்டீஸ்வரம் போலீசார் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி செந்திலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது சிறுமியின் வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தையை சிறுமியின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
அந்தக் குழந்தை மற்றும் செந்திலின் ரத்த மாதிரியை போலீசார் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இதில் சிறுமியின் வயிற்றில் இருந்த குழந்தைக்கும், செந்திலின் மரபணுவுக்கும் பொருந்தவில்லை என்பது தெரியவந்தது.
இதனால் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவரை பாலியல் பலாத்காரம் செய்தவர் யார்? என்பதில் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. சிறுமியிடம் போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கினர். சிறுமியின் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை தீவிரமாக நடந்தது.
போலீசார் தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. அதாவது தனது தந்தையே (கொத்தனார்) தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததை சிறுமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான கொத்தனாருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். 15 வயதான 2-வது மகள் கொத்தனாருடன் வசித்து வருகிறார். இவர் கர்ப்பமாக இருப்பது கடந்த மாதம் (மார்ச்) தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கொத்தனார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 15 வயது சிறுமியின் கற்பத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பட்டீஸ்வரம் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது உடையாளூர் மண்ணடி தெருவைச் சேர்ந்த செந்தில் (வயது 28). என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி போலீசாரிடம் கூறினார்.
அதன்பேரில் பட்டீஸ்வரம் போலீசார் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி செந்திலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது சிறுமியின் வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தையை சிறுமியின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
அந்தக் குழந்தை மற்றும் செந்திலின் ரத்த மாதிரியை போலீசார் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இதில் சிறுமியின் வயிற்றில் இருந்த குழந்தைக்கும், செந்திலின் மரபணுவுக்கும் பொருந்தவில்லை என்பது தெரியவந்தது.
இதனால் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவரை பாலியல் பலாத்காரம் செய்தவர் யார்? என்பதில் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. சிறுமியிடம் போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கினர். சிறுமியின் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை தீவிரமாக நடந்தது.
போலீசார் தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. அதாவது தனது தந்தையே (கொத்தனார்) தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததை சிறுமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X