என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சூளைமேட்டில் ஸ்டூடியோ போட்டோகிராபருக்கு கொரோனா - மனைவி - மகள்கள் கண்காணிப்பு
சென்னை:
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நேற்று வரையில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
அவருடன் தொடர்பில் இருந்த 35 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஸ்டூடியோ போட்டோ கிராபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வட பழனியில் ஸ்டூடியோ வைத்துள்ள அவர் கடந்த 23-ந்தேதியில் இருந்து அதனை மூடி வைத்துள்ளார் . கடந்த 2 -ந் தேதி உடல்நல குறைவால் திருவல்லிக்கேணி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போட்டோகிராபரின் மனைவி, 2 மகள்கள். தாய் ஆகிய 4 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். போட்டோ கிராபர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதோ அல்லது ஸ்டூடியோவுக்கு போட்டோ எடுக்க வந்த நபர், மூலமாகவோ கொரோனா பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்