என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்7 April 2020 7:54 AM GMT (Updated: 7 April 2020 7:54 AM GMT)
தஞ்சை அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த வல்லம் புதூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்குப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், சேகர் மற்றும் போலீசார் வல்லம்-வல்லம்புதூர் இடையே குளக்கரையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில், வாலிபர் ஒருவர் வந்தார். அவர் போலீசாரை பார்த்தவுடன் மொபட்டை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர்.
பின்னர் அவரிடம் விசாரித்த போது அவர், வல்லம்புதூர் மேலத்தெருவை சேர்ந்த ரெங்கராஜ் மகன் ரமேஷ் (வயது 24) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர். இவர் சென்னம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் சாராயம் வாங்கி வந்தது தெரியவந்ததால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சையை அடுத்த வல்லம் புதூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்குப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், சேகர் மற்றும் போலீசார் வல்லம்-வல்லம்புதூர் இடையே குளக்கரையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில், வாலிபர் ஒருவர் வந்தார். அவர் போலீசாரை பார்த்தவுடன் மொபட்டை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர்.
பின்னர் அவரிடம் விசாரித்த போது அவர், வல்லம்புதூர் மேலத்தெருவை சேர்ந்த ரெங்கராஜ் மகன் ரமேஷ் (வயது 24) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர். இவர் சென்னம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் சாராயம் வாங்கி வந்தது தெரியவந்ததால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X