என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு விதிமீறல்- தமிழகத்தில் 82,752 வழக்குகள் பதிவு
Byமாலை மலர்6 April 2020 8:21 AM GMT (Updated: 6 April 2020 8:21 AM GMT)
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதாக இதுவரை 82,752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு பகுதிகளில் கொரோனாவின் தீவிரத்தை உணராமல் பொதுமக்கள் வாகனங்களில் செல்கின்றனர். தடையை மீறி செல்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்திலும் தடையை மீறி வாகனங்களில் செல்வோர் மீது தமிழகம் முழுவதும் போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 82,752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தடை உத்தரவை மீறியதாக காவல்துறையால் 90,918 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றியவர்களிடம் இருந்து 69,589 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X