என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - மெக்கானிக் பலி
Byமாலை மலர்5 April 2020 1:54 PM GMT (Updated: 5 April 2020 1:54 PM GMT)
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார். மின்வாரிய ஊழியர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், நாவலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் முத்தையா (வயது 55). இவர் பெரம்பலூரில் நான்கு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். முத்தையா நேற்று காலை மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் நோக்கி புறப்பட்டு சென்றார். நாவலூர்-எசனை சாலையில் மதவானை அம்மன் ஏரிக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், முத்தையா ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த எசனை 4-வது வார்டை சேர்ந்த ரவி(37), பின்னால் அமர்ந்து வந்த எசனையை சேர்ந்த சரவணன்(37), பழனிசாமி(38) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர்.
அவர்களை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், முத்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இறந்து போன முத்தையாவிற்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், சரண்யா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காயமடைந்த ரவி அம்மாபாளையத்தில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். சரவணனும், பழனிசாமியும் வெங்காய வியாபாரி ஆவார்கள்.
பெரம்பலூர் மாவட்டம், நாவலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் முத்தையா (வயது 55). இவர் பெரம்பலூரில் நான்கு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். முத்தையா நேற்று காலை மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் நோக்கி புறப்பட்டு சென்றார். நாவலூர்-எசனை சாலையில் மதவானை அம்மன் ஏரிக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், முத்தையா ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த எசனை 4-வது வார்டை சேர்ந்த ரவி(37), பின்னால் அமர்ந்து வந்த எசனையை சேர்ந்த சரவணன்(37), பழனிசாமி(38) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர்.
அவர்களை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், முத்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இறந்து போன முத்தையாவிற்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், சரண்யா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காயமடைந்த ரவி அம்மாபாளையத்தில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். சரவணனும், பழனிசாமியும் வெங்காய வியாபாரி ஆவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X