search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு பணியில் போலீசார்
    X
    பாதுகாப்பு பணியில் போலீசார்

    கொரோனா தொற்று உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்ட தனிவார்டுக்கு கவச உடை அணிந்த போலீஸ் பாதுகாப்பு

    கொரோனா தொற்று உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்ட தனிவார்டுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு முக கவசம், பாதுகாப்பு கவச உடை, கையுறை ஆகியவை வழங்கப்பட்டன.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வார்டுக்குள் வெளிநபர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் வார்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு முக கவசம், பாதுகாப்பு கவச உடை, கையுறை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அவற்றை அணிந்துகொண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
    Next Story
    ×