என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்த போலீஸ் சூப்பிரண்டு
Byமாலை மலர்3 April 2020 3:12 PM GMT (Updated: 3 April 2020 3:12 PM GMT)
கள்ளக்குறிச்சியில் தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் எச்சரித்து திருப்பி அனுப்பினார்.
கள்ளக்குறிச்சி:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர். அவர்களை பிடித்து போலீசார் பலமுறை எச்சரித்தும், பொதுமக்கள் தடை உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து பொதுஇடங்களில் சுற்றித்திரிகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், நேற்று காலை கள்ளக்குறிச்சியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது அத்தியாவசிய தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து விசாரித்தார். பின்னர் அவர் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகள் வாங்க செல்வதாக கூறிக்கொண்டு ஊர் சுற்றக்கூடாது என எச்சரித்து, வாகன ஓட்டிகளை, அவர்கள் வந்த வழியாகவே திருப்பி அனுப்பினார்.
பின்னர் அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறி, வீட்டிலேயே தனித்து இருக்குமாறு அறிவுரை கூறினார். மேலும் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நின்ற பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர். அவர்களை பிடித்து போலீசார் பலமுறை எச்சரித்தும், பொதுமக்கள் தடை உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து பொதுஇடங்களில் சுற்றித்திரிகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், நேற்று காலை கள்ளக்குறிச்சியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது அத்தியாவசிய தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து விசாரித்தார். பின்னர் அவர் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகள் வாங்க செல்வதாக கூறிக்கொண்டு ஊர் சுற்றக்கூடாது என எச்சரித்து, வாகன ஓட்டிகளை, அவர்கள் வந்த வழியாகவே திருப்பி அனுப்பினார்.
பின்னர் அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறி, வீட்டிலேயே தனித்து இருக்குமாறு அறிவுரை கூறினார். மேலும் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நின்ற பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X