என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி மாவட்டத்தில் அவசர தேவைக்கு வெளியூர் செல்வோர் விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்2 April 2020 4:29 PM GMT (Updated: 2 April 2020 4:29 PM GMT)
ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் தேனி மாவட்டத்தில் அவசர தேவைக்கு வெளியூர் செல்வோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி
கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடத்திடும் விதமாக சமூக தனிமைபடுத்தலை தீவிரபடுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், தேனி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் திருமணம் மற்றும் இறப்பு போன்ற சமூக நிகழ்வுகளுக்காகவும், அவசர மருத்துவ தேவைகளுக்காகவும் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு அனுமதி வழங்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவட்டத்துக்குள் பயணம் செய்யும் நபர்கள் அந்தந்த பகுதி தாசில்தார்களிடமும், தேனி மாவட்டத்துக்கு வெளியே பயணம் செய்ய வேண்டியுள்ள நபர்கள் மாவட்ட கலெக்டரிடமும் அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் 80999 14914 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து வரப்பெறும் லிங்க் வழியாகவோ அல்லது https:--epasskki.in- என்ற இணையதளத்தின் மூலமோ விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அனைத்து சூழ்நிலைகளிலும் கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடை பிடித்தல் போன்றவற்றை கையாண்டு நோய் தொற்று பரவுதலை தடுக்குமாறும் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X