என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வெள்ளி, ஞாயிறு மூடப்படும்
சென்னை:
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் இடநெருக்கடி காரணமாக மேதினப்பூங்கா அருகே இடம் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
அங்கு கழிவுநீர் செல்வதற்கு வசதிகள் செய்யாமல் இருந்ததால் அங்கு சுகாதாரம் பேணப்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தக்க அறிவுரைகளை வழங்கினார்கள். சில கட்டுப்பாடுகளையும் விதித்தனர்.
இந்த நிலையில் சிந்தா திரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுக்கு மக்கள் அதிக அளவில் வருவதால் நெருக்கடியை தவிர்ப்பதற்காக நாளையும் (வெள்ளி), ஞாயிற்றுக்கிழமையும் மீன் மார்க்கெட் இயங்காது. சனிக்கிழமை காலை 3 மணி முதல் 6 மணி வரை மார்க்கெட் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 15-ந் தேதி முதல் மீன்பிடி தடை காலம் தொடங்குவதால் மீனவர்களுக்கு உதவித் தொகை கொடுப்பதை அரசு இரட்டிப்பாக்கி தர வேண்டும் என்றும், ஆகஸ்டு மாதம் முதல் மீன் பிடி தடை காலத்தை அமல்படுத்தலாம் என்றும், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது போதிய அளவு மீன்கள் இல்லாததால் ஆந்திராவில் இருந்து மீன், இறால் வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்