என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு
Byமாலை மலர்30 March 2020 12:55 PM GMT (Updated: 30 March 2020 12:55 PM GMT)
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தொடர்ந்து தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
ராமநாதபுரம்:
கொரோனா பரவலை தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். அண்மையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 4125 பேரை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் 30 நாட்களை கடந்த நிலையில் 1092 பேருக்கு கொரோனா தொற்று இல்லை உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 3033 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையில், மத்திய அரசு உத்தரவுப்படி மார்ச் 1-ந் தேதிக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் 159 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். அண்மையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 4125 பேரை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் 30 நாட்களை கடந்த நிலையில் 1092 பேருக்கு கொரோனா தொற்று இல்லை உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 3033 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையில், மத்திய அரசு உத்தரவுப்படி மார்ச் 1-ந் தேதிக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் 159 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X