search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதாகர்
    X
    சுதாகர்

    ஆரணி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை

    ஆரணி அருகே காதல் திருமணம் செய்த தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுதாகர் (வயது28). இவர் ஆரணி அருகே உள்ள ஒண்டி குடிசை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகளை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தார். 6 மாதத்திற்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்தனர்.

    சுதாகர், தம்பதியினரை பஞ்சாயத்து செய்து பிரித்து வைத்ததாக கூறப்டுகிறது. ஆனால் சுதாகர், இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் சுதாகரை கண்டித்துள்ளனர். மேலும் சுதாகரை தீர்த்து கட்ட முடிவு செய்த மூர்த்தி மற்றும் உறவினர் கதிரவன் ஆகியோர் இன்று காலையில் மொரப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரி பகுதிக்கு சென்றனர். அங்கு சுதாகர் அவரது நண்பரான கோபி என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மூர்த்தி மற்றும் கதிரவன் திடீரென சுதாகரை கடுமையாக தாக்கினார்கள். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தலையில் அடித்தனர். இதில் சுதாகர் துடிதுடித்து இறந்தார். மூர்த்தி, கதிரவன் ஆகியோர் தப்பியோடி விட்டனர்.

    சுதாகரின் நண்பர் கோபி ஊருக்குள் வந்து நடந்ததை கூறினார். ஊர் பொதுமக்கள் சென்று ஏரிகரையில் அருகே பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சுதாகர் இறந்து கிடந்தார்.

    தகவலறிந்த ஆரணி தாலூகா போலீசார் சுதாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தப்பி ஓடிய மூர்த்தி, கதிரவன் ஆகியோரை பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து ஆரணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    Next Story
    ×