என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆரணி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுதாகர் (வயது28). இவர் ஆரணி அருகே உள்ள ஒண்டி குடிசை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகளை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தார். 6 மாதத்திற்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்தனர்.
சுதாகர், தம்பதியினரை பஞ்சாயத்து செய்து பிரித்து வைத்ததாக கூறப்டுகிறது. ஆனால் சுதாகர், இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் சுதாகரை கண்டித்துள்ளனர். மேலும் சுதாகரை தீர்த்து கட்ட முடிவு செய்த மூர்த்தி மற்றும் உறவினர் கதிரவன் ஆகியோர் இன்று காலையில் மொரப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரி பகுதிக்கு சென்றனர். அங்கு சுதாகர் அவரது நண்பரான கோபி என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மூர்த்தி மற்றும் கதிரவன் திடீரென சுதாகரை கடுமையாக தாக்கினார்கள். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தலையில் அடித்தனர். இதில் சுதாகர் துடிதுடித்து இறந்தார். மூர்த்தி, கதிரவன் ஆகியோர் தப்பியோடி விட்டனர்.
சுதாகரின் நண்பர் கோபி ஊருக்குள் வந்து நடந்ததை கூறினார். ஊர் பொதுமக்கள் சென்று ஏரிகரையில் அருகே பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சுதாகர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த ஆரணி தாலூகா போலீசார் சுதாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி ஓடிய மூர்த்தி, கதிரவன் ஆகியோரை பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து ஆரணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்