search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபாட்டில்கள் திருட்டு (கோப்புப்படம்)
    X
    மதுபாட்டில்கள் திருட்டு (கோப்புப்படம்)

    டாஸ்மாக் கடையை உடைத்து 500 மதுபாட்டில்கள் திருட்டு

    டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 500 மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
    சிங்காநல்லூர்:

    ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையை பார்த்தனர். அப்போது அங்கிருந்த 500 மதுபாட்டில்களை காணவில்லை. மர்ம நபர்கள் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதே போல் அன்னூர் அருகே உள்ள பச்சாப்பாளையத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.

    Next Story
    ×