search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம்
    X
    திருமணம்

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 144 தடை உத்தரவு - எளிய முறையில் நடந்த திருமணம்

    கொரோனா அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 20 பேர் மட்டுமே பங்கு கொண்டு எளிய முறையில் திருமண விழா நடைபெற்றது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சார்ந்த சிவஜோதிக்கும் ஏரவாஞ்சேரி பகுதியை சார்ந்த கார்த்திகா என்பவருக்கும் இரண்டு மாதம் முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபத்தில் நடக்கவிருந்த திருமணம் கொரோனா வைரஸ் எதிரொலி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருமணத்தை நிறுத்த மனமின்றி வீட்டிற்கு அருகே உள்ள சிறிய கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

    மணமக்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

    திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளை சோப் போட்டு கழுவிய பின்னரே திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருமணத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் கோயிலில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. திருமணம் நடந்த அரை மணி நேரத்திலேயே உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

    Next Story
    ×