search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மதுரையில் கொரோனாவுக்கு பலியானவரின் குடும்பத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி

    மதுரையில் கொரோனாவுக்கு பலியானவரின் குடும்பத்தை சேர்ந்த 2 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் பலியானார். தமிழகத்தில் முதல் கொரோனா பலி இதுவாகும்.

    கொரோனாவால் இறந்த நபர் வெளிநாட்டில் இருந்து வந்த மதபோதகர்களுடன் பழகி வந்ததாகவும், இதனால் நோய் தொற்று இருக்கலாம் என கருதப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட மத போதகர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப் படுத்தி மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

    இதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அண்ணாநகரை சேர்ந்த 54 வயது நபர் இறந்த உடனே அவர்களது உறவினர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது.

    இதில் இறந்தவரின் குடும்பத்தை சேர்ந்த 2 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதபோதகர்கள் மூலம் கொரோனா பரவவில்லை எனில், யார் மூலம் இந்த நோய் பரவியது என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    Next Story
    ×