என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் திடீர் மாயம்
கோவை:
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கோவையை சேர்ந்த மாணவி மற்றும் திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஆகிய 2 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர மேலும் 30 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் திடீரென மாயமானார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் தப்பியோடிய பெண்ணை தீவிரமாக தேடினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் அந்தப் பெண் பதுங்கி இருந்தார்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு மீண்டும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சை வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்