என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவ கருவிகள் வாங்க அன்புமணி ராமதாஸ் ரூ.3 கோடி நிதியுதவி
Byமாலை மலர்26 March 2020 4:11 AM GMT (Updated: 26 March 2020 4:11 AM GMT)
தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்க உள்ளார்.
சென்னை:
பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தேவைப்படும் மருத்துவ கருவிகளை வாங்க தமிழக அரசுக்கு எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையை பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்.
கொரோனாவை கட்டுப்படுத்த 3 வார ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஒரு வாரத்திற்கும் மேலாக நான் வலியுறுத்தி வந்த நிலையில், அதை பிரதமர் அறிவித்து இருப்பது நிம்மதி அளிக்கிறது. கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கு மிகச்சிறந்த நடவடிக்கை இதுவாகும்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களாக இருந்தாலும், அண்டை மாநிலங்களில் இருந்தும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் கிராமங்களுக்கு சென்றவர்களாக இருந்தாலும் அடுத்த சில வாரங்களுக்கு தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தேவைப்படும் மருத்துவ கருவிகளை வாங்க தமிழக அரசுக்கு எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையை பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்.
கொரோனாவை கட்டுப்படுத்த 3 வார ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஒரு வாரத்திற்கும் மேலாக நான் வலியுறுத்தி வந்த நிலையில், அதை பிரதமர் அறிவித்து இருப்பது நிம்மதி அளிக்கிறது. கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கு மிகச்சிறந்த நடவடிக்கை இதுவாகும்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களாக இருந்தாலும், அண்டை மாநிலங்களில் இருந்தும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் கிராமங்களுக்கு சென்றவர்களாக இருந்தாலும் அடுத்த சில வாரங்களுக்கு தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X