search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவையில் பனியன் கம்பெனி அதிபர் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

    கோவையில் பனியன் கம்பெனி அதிபர் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    திருப்பூரை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ்(வயது 36). இவர் அங்கு பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.

    இவருக்கு திருமணம் ஆகி ஒரு கைக்குழந்தை உள்ளது. நேற்று தனது மனைவியிடம் பெங்களூர் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியில் வந்தார்.

    ஆனால் அவர் பெங்களூர் செல்லாமல் நேராக கோவை வந்தார். பின்னர் அவினாசி ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்கினார்.

    நேற்று இரவு திடீரென தான் தங்கியிருந்த ஓட்டலின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்த அதிர்ச்சியான ஓட்டல் ஊழியர்கள் சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில் சூர்ய பிரகாஷ் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    Next Story
    ×